தேவையானவை:
இட்லிகள்- 10
இட்லி மிளகாய்ப்பொடி- 1 தேக்கரண்டி
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகைவற்றல்- 1
கறிவேப்பிலை- 1 இணுக்கு
பெரிய வெங்காயம்- 1
செய்முறை:
1. காலையில் செய்து மீந்த இட்லிகளையோ புதிதாகத் தயாரித்த இட்லிகளையோப் பயன்படுத்தலாம்.
2. தாளிசப்பொருட்களை ஒரு வாணலியில் தாளித்துக் கொண்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
3. இட்லிகளை உதிர்த்துக் கொள்ளவும்
4. தாளிசப்பொருட்களோடு இட்லியைக் கலந்து இட்லி மிளகாய்ப்பொடியையும் சேர்த்துக் கிளறிச் சூடாகப் பரிமாறவும்.
5. மீந்த இட்லிகள் கனமாக ஆகி விடும், வீணடிப்பதற்குப் பதிலாக இவ்வகையில் சுடச்சுட உப்புமா செய்தால் உனக்கு, எனக்கு எனப் போட்டிப் போட்டு கிடுகிடுவென வியாபாரம் ஆகி விடும்.