
தேவையானவை:
இட்லி- 10
சாம்பார் செய்ய:
துவரம்பருப்பு- 1/2 கப்
புளி- எலுமிச்சை அளவு
சாம்பார் பொடி- 2 தேக்கரண்டி
உப்பு,காயம்,மஞ்சள் தூள்- தேவையான அளவு
காய்கறிகள்:
சின்ன வெங்காயம்- 10
தக்காளி- 1
முருங்கைக்காய்- 8
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
சாம்பார் தூள் செய்ய:
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
தனியா- 2 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 8
தாளிக்க:
நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
சாம்பார் பொடி:
1. வாணலியில் வெந்தயத்தைச் சிவக்க வறுக்கவும், பிறகு கடலைப்பருப்பைச் சிவக்க வறுத்துத் தனியே ஆற விடவும்.
2. தனியாவையும் சிவக்க வறுக்கவும்
3. மிளகாய்வற்றலையும் வறுத்து மின்னரைப்பானில் திரித்து வைத்துக் கொள்ளவும்.
சாம்பார் செய்முறை:
1. பருப்பைக் குழைவாக வேக விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். அதனுடன் சின்னவெங்காயத்தை வதக்கிப் பின் தக்காளி, முருங்கைக்காய் சேர்க்கவும்
2. புளித்தண்ணீரைச் சேர்த்து(3 டம்ளர் அளவுக்கு) உப்பு, மஞ்சள் தூள், 2 தேக்கரண்டி சாம்பார் பொடி, காயம் சேர்த்து மூடி விடவும்.
3. காய் வெந்ததும் வேக வைத்தப் பருப்பைச் சேர்க்கவும்
4. கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
சாம்பார் இட்லி:
1. இட்லிகளை(மினி இட்லி அல்லது தட்டையான வடிவில் செய்வது நன்றாக இருக்கும்) செய்து ஆற விடவும்.
2. சாம்பாரை இட்லிகளின் மேல் பரவலாகத் தூவவும்.
3. நல்லெண்ணெயில் கடுகு, கடலைப்பருப்பு, வெள்ளை உளுத்தம்பருப்பு சிவக்க வறுத்து தாளிசப்பொருட்களைச் சாம்பார் இட்லியின் மேல் கொட்டவும்.
4. சாம்பாரில் காரம் குறைவு என்றால் தாளிக்கும் போது பச்சைமிளகாயையும் சேர்க்கலாம்.
சுவையான சாம்பார் இட்லி தயார்.
கூடுதல் தகவல்கள்:
1. சின்ன வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் கூட்டணியைப் போல முள்ளங்கி, தக்காளி அல்லது குடமிளகாய், காரட், தக்காளி அல்லது வெண்டைக்காஇ போன்ற காய்கள் ருசியை வித்தியாசப்படுத்தும்.
2. சாம்பார் பொடி புதிதாகத் திரித்துப் பண்ணும் போது கூடுதல் சுவை கிடைக்கும்.
3. காலையில் மீந்த இட்லிகளை வியாபாரம் செய்யக் கூட இட்லி சாம்பார் செய்து அசத்தலாம்.