தேவையானவை:
உதிராக வடித்த பச்சரிசி சாதம்- 2 கப்
துருவின தேங்காய்- அரை கப்
உப்பு- தேவையான அளவு
தாளிக்க:
தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
பச்சைமிளகாய்- 1
பெருங்காயம்- 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பு- கைப்பிடி அளவு
செய்முறை:
1. சாதத்தை விறைப்பாக வடித்து ஆற விடவும்.
2. துருவின தேங்காயை வறுத்து ஆற விடவும்.
3. தேங்காய் எண்ணெயில் தாளிசப் பொருட்களைத் தாளித்து வறுத்தத் தேங்காய்த்துருவலையும் உப்பையும் சேர்த்து நிலக்கடலை அல்லது முந்திரிப்பருப்பையும் கலந்து ஒரு புரட்டு புரட்டி ஆற விடவும்.
4. ஆறிய சாதத்துடன் வறுத்தத் தாளிசக் கலவையைக் கலக்க ருசியான தேங்காய்ச்சாதம் தயார்.
5. பூஜை நேரங்களில் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய அம்சமான சித்ரான்னம் இந்தத் தேங்காய்ச்சாதம்.