கேரட் பொரியல்

Image

தேவையானவை:

கேரட்- 4
தேங்காய்த்துருவல்- 2 தேக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்- 1 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
மிள்காய்வற்றல் – 2
கறிவேப்பிலை- 1 இணுக்கு
உப்பு- தேவையான அளவு

செய்முறை:

1. கேரட்டை மேலோட்டமாகத் தோல் சீவி(தோலில் உள்ள உயிர்ச்சத்துக்கள் அழிந்து விடுமென்பதால்) பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மைக்ரோவேவ் இருப்பவர்கள் ஒரு நிமிடத்திற்கு கேரட்டை வைத்து நறுக்கினால் நறுக்க சுலபமாக இருக்கும்.

2. வாணலியில் தாளிசப்பொருட்களைத் தாளித்து விட்டு கேரட்ட், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும்.

3. அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விடவும்.

4. கேரட் வெந்தவுடன் தேங்காய்த்துருவலைப் போட்டுப் பிரட்டிப் பரிமாறவும்.

5. கேரட்டைப் பொடியாக நறுக்காமல் துருவிப் போட்டும் செய்யலாம், இவ்வாறு செய்யும் போது கோஸையும் துருவிப் போட்டுப் பொரியல் செய்யலாம்.

6. காலிபிளவர், பீட்ரூட், கோஸ், கேரட் போன்ற காய்களைத் துருவிப் பொரியல் செய்ய மேற்கூறிய காய்களின் பலன் அத்தனையும் உடலிற்குக் கிடைக்கும்.

 

கேரட்டின் நன்மைகள்:
1. தாவரத்தங்கம் என்று அழைக்கப்படுகின்ற, பச்சையாகவே சாப்பிடக் கூடிய கேரட்டின் மருத்துவ குணங்கள் ஏராளம். இத்தனை சிறப்பு வாய்ந்த கேரட்டை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் உடலில் உள்ள பல நோய்கள் போய் விடும். கேரட்டில் வைட்டமின் சத்து நிறைய உள்ளது. கேரட்டில் உள்ள கரோட்டீன் சத்தை ஈரல் வைட்டமின் ஏ சத்தாக மாற்றி உடம்பினுள் சேமித்து வைக்கும்.

 
2. கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்குக் கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.

 
3.கேரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகேரட்டின் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகேரட்டின்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகேரட்டின் தடுத்து நிறுத்துகிறது. 

 
4. பீட்டாகேரட்டின் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கேரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

 

5. பீட்டா கரோட்டீன் கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.

 
6. உடல் எடையைக் குறைக்க விரும்புவோர் அவசியம் சேர்க்க வேண்டிய காயிது(46 கலோரிகள் மட்டுமே கொண்டது)

 
7.இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

 
8. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் நீங்கும்.

 
9.கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பகப் புற்று நோய் முற்றாமல் காத்துக் கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர், கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்று நோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 
10.இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் “ஏ” விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்று நோய் உண்டாக்கும் செல்களை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடும். கேரட் சருமத்திற்குப் பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. 

 
11.கேரட்டை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், தங்கம் போன்று மேனி பளபளக்கும் என்பதாலேயே அதற்கு தாவரத் தங்கம் என்று பெயர் வந்தது.

 
12.கேரட்டில் நார்ச் சத்து அதிகம் உள்ளதால் அதிக நன்மை தருவதுடன் செரிமானத்தைத் தூண்டி நல்ல ஜீரண சக்தியையும் அளிக்கிறது.

 
13.வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் நோய்களையும் குணப்படுத்துகிற ஆற்றலும் கேரட்டிற்கு உண்டு குடல்புண் (அல்சர்) நோய் உள்ளவர்கள் கேரட்டைத் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல்புண் படி படியாக குறையும்.

 
14.புற்றுநோய்,எலும்புருக்கி,சிறுநீர்ப்பாதையில் அடைப்பு உள்ளவர்கள் கேரட்சாறுடன் பாலும்தேனும் கலந்து குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.
15.கர்ப்பிணிகள் சாப்பிட்ட பின் ஒரு கேரட்டை மென்று தின்றால் கர்ப்பப்பையின் சுவர்களில் நச்சுத்தன்மையை விளைவிக்கக்குடிய கிருமிகள் அழிந்துவிடும்.இதைத் தொடர்ந்து சாப்பிட்டால் உமிழ்நீர்சுரப்பு அதிகரிக்கும்.சீரணத்தைத் துரிதப்படுத்தும்.

 

***********************************************************

 

 

 

பின்னூட்டமொன்றை இடுக