கலவை பொரியல்

Image

தேவையானவை:

பீன்ஸ் – 10
கேரட்- 2
பச்சைப்பட்டாணி- 1 கிண்ணம்
பாசிப்பருப்பு- 1 கிண்ணம்

 

தாளிக்க:

எண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு- 1 மேசைக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 மேசைக்கரண்டி
மிளகாய்வற்றல்- 2
கறிவேப்பிலை- 1/2 இணுக்கு
உப்பு, மஞ்சள்தூள்- தேவையான அளவு

செய்முறை:

1. காய்கறிகளை அலம்பி நறுக்கிக் கொள்ளவும்.
2. எண்ணெயில் தாளிசப்பொருட்களைத் தாளித்துக் கொண்டு பீன்ஸ், கேரட், பட்டாணியை உப்பு, மஞ்சள் தூளிட்டு நீர் சிறிதளவு விட்டு மூடி விடவும், அவ்வப்போது வதக்கவும்.
3. பாசிப்பருப்பைச் சுண்டலிற்கு வேக வைப்பது போல உதிராக வெந்து வைக்கவும்.
4. தனியே வாணலியில் சுண்டல் பதத்திற்கு உதிர் உதிராகப் பருப்பை வதக்கவும்.
5. வெந்த காயைச் சேர்த்துக் கலக்கவும்.

கூடுதல் செய்திகள்:

1. காய்கறிகள் குறைவாக இருக்கும் வேளையில் கணிசத்தைக் கூட்ட இந்த முறையில் செய்யலாம்.
2. இதே முறையில் பீன்ஸ், அவரைக்காய் போன்ற காய்களிலும் பொரியல் செய்யலாம்.
3. மிளகாய்வற்றலிற்குப் பதில் பச்சைமிளகாய், இஞ்சி சேர்த்தும் செய்யக் கூடுதல் சுவை கிடைக்கும்.
4. ஒரே காயில் பொரியலாக இல்லாமல் 3, 4 காய்களின் சத்துக்களும் உடலிற்குக் கிடைக்கும்.
5. பார்க்கவும் வண்ணமயமாக இருக்கும் பொரியல் இது.

 

பின்னூட்டமொன்றை இடுக