தேவையானவை:
அவல்- 1 1/2 டம்ளர்
பாசிப்பருப்பு- 1/2 டம்ளர்
உப்பு- தேவையான அளவு
பெருங்காயம்- சிறிதளவு
தாளிக்க:
எண்ணெய்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
மிளகு- 1 தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- 2
இஞ்சி- 1 துண்டு
முந்திரிப்பருப்பு- 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்க
செய்முறை:
1. பாசிப்பருப்பை உதிர் உதிராக வேக வைக்கவும். அல்லது இரண்டு விசில்கள் வருமாறு குக்கரில் வேக வைக்கவும்.
2. அடுப்பை ஏற்றி ஒரு வாணலியில் எண்ணெய், நெய் இட்டுத் தாளிக்கக் கொடுத்தப் பொருட்களைப் போட்டு வறுக்கவும்.
3. வறுத்தனவற்றுடன் அவல் சேர்த்து வதக்கவும்.
4. குக்கரில் வெந்து வைத்திருக்கும் பாசிப்பருப்பினை அவல், தாளிசக்கூட்டணியுடன் சேர்த்து உப்பு, காயம் சேர்த்து 3 டம்ளர் அளவு தண்ணீரைச் சேர்க்கவும். கிளறி விடவும்.
5. அடுப்பைக் குறைந்த தீயில் வைத்து வேக விடவும்.
6. பொங்கல் தயாரானதும் இன்னும் சிறிது நெய் சேர்த்துக் கலந்து கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்:
1. அவல் பொங்கல் செய்வதற்கு எளிமையான ருசியான உணவு வகை.
2. அரிசி தவிர்க்க விரும்புவர்களுக்கு அருமையான மாற்று உணவு.
3. திடமான அவலைப் பயன்படுத்த வேண்டும்.
4. அவரவர் குடும்பத்திற்கு ஏற்பக் காரம் கூட்டியும் குறைத்தும் செய்து கொள்ளலாம்.
5. அலுவலகம்/பள்ளி/கல்லூரி சென்று வரும் குடும்பத்தினரையும் திடீர் விருந்தினரையும் அசத்த அருமையான உணவு.
6. கோசாலி மாங்காய் ஊறுகாய், தக்காளி, குடமிளகாய்ச்சட்னி, சாம்பார், இடிதுவையல்(சம்மந்திப்பொடி) வகையறாக்கள் தகுந்த இணைகள்.