தேவையானவை:
பீட்ரூட்- 2
உருளைக்கிழங்கு- 1
காரட்- 1
வேக வைத்தப் பச்சைப்பட்டாணி – 1 கிண்ணம்
வெங்காயம்- 2
தக்காளி- 1
காலிபிளவர்- ஒரு கிண்ணம்
பட்டர் பீன்ஸ்- ஒரு கிண்ணம்
நூல்கூல்- 1
உப்பு- தேவையான அளவு
வறுத்து அரைக்க:
நெய்- 2 தேக்கரண்டி
தனியா- ஒரு கைப்பிடி
பொட்டுக்கடலை- ஒரு கைப்பிடி
முந்திரிப்பருப்பு- அரைக்கைப்பிடி
சோம்பு- 2 தேக்கரண்டி
பட்டை- 6 இலைகள்
கிராம்பு- 3
ஏலக்காய்- 4
பச்சைமிளகாய்- 5
பூண்டு- 3 பல்லு
தேங்காய்- கால் மூடி
அலங்கரிக்க:
கொத்தமல்லி
செய்முறை:
1. காய்கறிகளைத் தோலகற்றி அலம்பிக்கொண்டு நறுக்கிக் கொள்ளவும்.
2. வெங்காயத்தைப் பச்சை வாடை போக வதக்கவும், தக்காளி, பிற காய்களையும் சேர்க்கவும். பாத்திரத்தில் காய்கறிகள் மூழ்குமளவிற்குத் தண்ணீர் ஊற்றி வேக விடவும், பாதி வெந்ததும் உப்பைச் சேர்க்கவும்(உப்பு முதலிலேயே சேர்த்தால் வேக நேரமாகும் என்பதால்…), காய்களை நறுக்கிப் போடும் போது பீட்ரூட்டை முதலில் போடலாம்(வேக நேரமாகும் காய்களை முதலில் சேர்க்கலாம்)
3. ஒரு வாணலியில் நெய்யை விட்டு வறுக்கத் தேவையானவற்றில் தனியா, முந்திரிப்பருப்பு, சோம்பு, பொட்டுக்கடலையைச் சிவக்க வறுக்கவும்.
4. பிறகு தனியே தட்டில் வறுத்ததை ஆற விடவும்.
5. பட்டை சோம்பு கூட்டணி, இஞ்சி, பச்சைமிளகாய், பூண்டை வறுத்துத் தனியே பாத்திரத்தில் சேர்த்து விட்டு தேங்காயைச் சிவக்க வறுக்கவும்.
6. வறுத்ததை ஆற விடவும்.
7. தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மின்னரைப்பானில் மைய அரைத்தெடுக்கவும்(சரியாக அரைக்கா விட்டால் தனியா அரைபடாமல் உண்ணும் போது நகம் போலத் தோன்றும்)
8. காய்கள் வெந்ததும் அரைத்ததைக் கொட்டிக் கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். சுவையான வண்ணமயமான பீட்ரூட் குருமா தயார்.
9. காய்கள் நம் விருப்பத்திற்கேற்பச் சேர்த்துக் கொள்ளலாம்(காலிபிளவர், நூல்கூல் சேர்க்கா விட்டாலும் பரவாயில்லை)
10. சப்பாத்திக்கு அருமையாக இருக்கும். முந்தின நாள் மீந்த சப்பாத்திகளைத் துண்டுகளாக்கிக் குருமாவுடன் சேர்த்து உண்ண ருசி அதிகம்.