தேவையானவை:
நாட்டுத்தக்காளி- 5
காரப்பொடி(மிளகாய்த்தூள்)- 1 தேக்கரண்டி
வெந்தயம்- 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
செய்முறை:
1. தக்காளியை அலம்பி நறுக்கிக் கொண்டு உப்பு சேர்த்து மின் அரைப்பானில் அரைத்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெயிட்டு கடுகு தாளிசம் செய்து கொள்ளவும்.
3. அரைத்த விழுதைத் தாளிசத்துடன் சேர்த்துக் காயம், மிளகாய்த்தூள் சேர்த்துக் குறைந்த தீயில் வைக்கவும்.
4. ஒரு வாணலியில் வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து கொண்டு அதில் ஒரு பாதியைக் கொதிக்கும் விழுதுடன் சேர்க்கவும்.
5. தக்காளித்தொக்கு தொக்கி வரும் வேளையில் மீதி வெந்தயத்தூளைப் போடவும்.
6. சுருள வரும் வேளையில் தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சித் தொக்குடன் இணைக்கவும்.
7. ஆறிய பின் கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
பொங்கல், இட்லி, தோசை, தயிர்சாதத்திற்குத் தொட்டுக் கொள்ள அருமையான ஊறுகாய்.இரண்டு நாட்களுக்கு வெளியிலே இருந்தாலும் கெடாது. மற்ற ஊறுகாய்களைப் போல இல்லாமல் விரைவில் ஊறுகாயைக் காலி செய்ய வேண்டும், இதற்கு ஆயுள் குறைவு.