ரவை – 1 கப்
தண்ணீர் – 2 1/2 கப்
சர்க்கரை – 1 3/4 கப்
நெய் – 3/4 கப்
கேசரி கலர்- சிறிதளவு
ஏலப்பொடி- சிறிதளவு
முந்திரிப் பருப்பு- ஒரு கைப்பிடி
கிஸ்மிஸ்-1 தேக்கரண்டி
செய்முறை:
1. அடுப்பில் வாணலியில் 2 தேக்கரண்டி நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.
2. மீண்டும் 2 தேக்கரண்டிநெய் விட்டு ரவை வாசனை போகும் வரை சிவக்க வறுக்கவும்.
3. இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.
4. ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும். சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.
5. ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
6. கேசரியை இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.
7.வறுத்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியைக் கலந்து கொள்ளவும்.
8. கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ்
முந்திரி தூவி, வில்லைகள் போடலாம்
பின்குறிப்புகள்:
1. ரவையைச் சிவக்க வறுத்து காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொண்டால் உப்புமா, கேசரி போன்றவற்றை விரைவில் செய்து முடிக்க வசதியாக இருக்கும், வறுத்து வைப்பதால் பூச்சிகளும் ரவையை அண்டாது.
2. சர்க்கரை அளவைக் குறைக்க விரும்புவர்கள் ஒரு கப் ரவைக்கு ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கலாம், சர்க்கரை குறைவாக இருப்பதால் அதிகம் உண்ணலாம்
3. ரவையைச் சிவக்க வறுப்பதிலும் கொதி நீரை ஊற்றும் போது கெட்டிப் பிடிக்காமல் கிளறுவதிலும் தான் சூட்சமம் உள்ளது.
4. கேசரி நிறமூட்டி மஞ்சள், சிவப்பு நிறங்களில் இருக்கும், சிறிதளவே பயன்படுத்த வேண்டும், அதிகம் போட்டால் கசந்து விடும், அதே போல் ரவையையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும், கருக விட்டால் கேசரி கசக்கும்.
5. திடீர் விருந்தினரை அசத்தும் பண்டிகை காலங்களில் செய்யக் கூடிய செய்வதற்கு எளிமையான, அருமையான இனிப்பு வகை. பெண் பார்க்கும் வைபவங்கள், திருமணங்களிலும் கேசரி சிறப்பிடம் வகிக்கிறது.