கோவக்காய்- 2 கிண்ணம்
பீர்க்கங்காய்- 2
பச்சைமிளகாய்- 5
மிளகாய்வற்றல்- 2
கொத்தமல்லி- ஒரு கைப்பிடி
புளி- எலுமிச்சை அளவு
உப்பு- தேவையான அளவு
கடலைப்பருப்பு- 2 தேக்கரண்டி
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
தாளிக்க:
நல்லெண்ணெய்- 2 தேக்கரண்டி
கடுகு- 1 தேக்கரண்டி
செய்முறை:
1. கோவக்காயை அலம்பித் துடைத்துக் கொள்ளவும்.
2. பீர்க்கங்கங்காயைத் தோலகற்றி நறுக்கிக் கொள்ளவும்.
3. வாணலியில் மிதமான தீயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பைச் சிவக்க வறுக்கவும், ஓரளவு சிவந்ததும் வெள்ளை உளுத்தம்பருப்பி வறுக்கவும். இதனுடன் பச்சைமிளகாய், மிளகாய்வற்றல், புளியையும் சேர்த்து வதக்கித் தனியே ஆற விடவும்.
4. அதே பாத்திரத்தில் எண்ணெய் விட்டுப் பொரியலுக்குச் செய்வதற்கு ஏற்ற வண்ணம் கோவைக்காயைப் போட்டு வதக்க வேண்டும். உப்பு சேர்த்து, ஓரளவு வெந்ததும் பீர்க்கங்காயைச் சேர்த்து வதக்க வேண்டும், பிறகு அடுப்பை அணைக்கவும்.
5. கொத்தமல்லி(மண் போக அலசி, நீர் இன்றி துடைத்தது) சேர்க்கவும்.
6. எல்லாம் ஆறியதும் வறுத்த பருப்பு, மிளகாய்க் கலவையுடன் கோவக்காய், பீர்க்கங்காயையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.
7. பிறகு நல்லெண்ணெய் விட்டு கடுகு தாளிசம் செய்து துவையலுடன் சேர்க்கவும்.
கூடுதல் தகவல்கள்:
1. நீர் படாததாலும் கைப்படாமல் செய்திருப்பதாலும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இந்தத் துவையல் கெடுவதில்லை.
2. இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், தயிர்சாதம், பொங்கல், உப்புமா என்று அனைத்து உணவு வகைகளுக்கும் சிறந்த இணையுணவு இந்தத் துவையல்.
3. மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்களும் அதிகமாகக் காரம் சேர்க்க விரும்பாதவர்களும் அடிக்கடி செய்யத் தேவையில்லை. பச்சைமிளகாய் காரத்திற்குப் பதில் மிளகாய்வற்றலைச் சேர்த்தும் செய்யலாம்.