கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
சீரகம்- 1/4 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கரம்மசாலாத்தூள்- 1/2 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது- 1 தேக்கரண்டி
துருவிய காலிபிளவர்
துருவிய காரட்
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை:
1. காலிபிளவரை உப்பிட்ட சுடுதண்ணீரில் ஊற வைக்கவும். அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் அழிந்து விடும்.
2. பிறகு நல்ல தண்ணீரில் அலசி ஒரு துணியால் ஈரத்தைத் துடைத்து விட்டு துருவிக் கொள்ளவும். காரட்டையும் துருவிக் கொள்ளவும்.
3. காரட்-காலிபிளவருடன் உப்பு, இஞ்சி, பூண்டு விழுது, சீரகம், கொத்தமல்லி, மிளகாய்த்தூள் சேர்க்கவும்.
4. கோதுமை மாவுடன் சிறிது உப்பு கலந்து இந்தக் கலவையையும் ஒன்றாகக் கலந்து மாவு பிசையவும்.
5. அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஊறிய பிறகு சப்பாத்திகளாக இட்டு அடுப்பில் கல்லில் போட்டு இரு புறமும் வெந்த பிறகு எண்ணெய் தடவி இறக்கவும்.
6. பச்சைமிளகாய் சேர்க்க விரும்புவர்கள் சேர்க்கலாம், ஆனால் காரப்பொடியும் இருப்பதால் காரத்தைப் பார்த்துச் சேர்க்க வேண்டும்.
7. மிகவும் ருசியான காலிபிளவர்- காரட் சப்பாத்தி விருந்தினரையும் குழந்தைகளையும் கவரும்.
8. காலிபிளவர்- உருளைக்கிழங்கு, காலிபிளவர்-உருளைக்கிழங்கு-பீன்ஸ் இணைகளில் சப்பாத்திகளும் ருசி அள்ளும்.