கோதுமை மாவு – 2 கப்
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
சீரகம்- 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய்- ஒரு உருளைக்கிழங்கிற்கு 2 சிறிய பச்சைமிளகாய்கள் வீதம்
மசாலாத்தூள்- சிறிதளவு
செய்முறை:
1. உருளைக்கிழங்கைத் தோலகற்றி மசிய வேக வைத்து மசித்து அதனுடன் உப்பு, சீரகம், பச்சைமிளகாயை, கரம் மசாலாத்தூளைச் சேர்க்கவும்.
2. கோதுமைமாவுடன் உருளைக்கிழங்கு மசாலாவைச் சேர்த்துத் தண்ணீர் ஊற்றி மாவைப் பிசையவும்.
3. சப்பாத்தி செய்வது போல வட்ட வடிவில் இட்டு கல்லில் போட்டு இரு புறமும் சிவந்த பிறகு திருப்பிப் போட்டு எண்ணெய் தடவிப் பரிமாறவும்.
4. ஆலோ பரோத்தாவில் தனியாக உருளைக்கிழங்கு மசாலவைப் பூரணமாக வைத்துச் செய்வோம், நேரடியாகக் கோதுமை மாவில் சேர்த்துச் சப்பாத்திப் போல் செய்வது உருளைக்கிழங்கு சப்பாத்தி.
5. காரங்களும் மசாலாப் பொருட்களும் அவரவர் விருப்பத்திற்கேற்பக் கூட்டியும் குறைத்தும் செய்யலாம்.
6. காரம் கூடி விட்டதென்றால் எலுமிச்சைச்சாறு அல்லது தயிர் சேர்க்கக் காரம் மட்டுப்படும்.