தேவையான பொருட்கள்
இட்லி – 6
சோளமாவு – 1 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி- 1 தேக்கரண்டி(துருவியது)
பச்சைமிளகாய்- 1
பூண்டு- 1 தேக்கரண்டி(துருவியது)
உப்பு -சுவைக்கு
எண்ணெய் – பொரிக்க
கேசரி கலர் – சிறிதளவு
செய்முறை:
1. இட்லிகளை விரல் நீளத்துண்டுகளாகவோ சதுரமாகவோ நறுக்கவும்.
2. அதனுடன் அனைத்துப் பொருட்களைம் கலந்து,சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசிறவும்.
3. எண்ணெய் காயவைத்து கலந்து வைத்துள்ள இட்லிகளைப் பொரித்தெடுக்கவும். இட்லிகளைப் பொரிக்காமல் வதக்கியும் செய்யலாம்.
4. கொத்தமல்லி தூவி அலங்கரிக்கச் சுவையான இட்லி மஞ்சூரியன் தயார்.
5.இட்லியா? வேண்டாமென்று அலறும் குழந்தைகளும் விரும்பி உண்ணுவர்,
காலையில் மீந்த இட்லிகளை மாலையில் இம்முறையில் சுட சுடச் செய்ய, உனக்கு எனக்கு எனப் போட்டி போட்டுக் காலி செய்வர்.
————————————————————————————————–