தேவையான பொருள்கள்:
சேமியா-2 கப்
ரவை-1/2 கப்
பாசிப்பருப்பு-1/2 கப்
மஞ்சள் தூள்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
தாளிக்க:
நெய்-2 தேக்கரண்டி
மிளகு-1 தேக்கரண்டி
சீரகம்-1 தேக்கரண்டி
முந்திரி-10
இஞ்சி-ஒரு சிறிய துண்டு
கறிவேப்பிலை
செய்முறை:
1. வாணலியில் பாசிப்பருப்பைப் போட்டு வாசம் வர, சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
2. அதே வாணலியில் சேமியாவையும்,ரவையையும் தனித்தனியாகச் சூடு வரும்படியாக வறுத்துக்கொள்ளவும்.
3.பாசிப்பருப்பை நன்றாக அலம்பி விட்டு அது வேகும் அளவு தண்ணீர் விட்டு,சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் குழையாமல் வேக வைக்கவும்.
4. ஒரு வாணலியில் நெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களைத் தாளித்து, ஒரு பங்கு சேமியா & ரவைக்கு இரண்டு (அ) இரண்டேகால் பங்கு தண்ணீர் ஊற்றி,மஞ்சள் தூள் சேர்த்து கலக்கிவிட்டு மூடி வைக்கவும்.
5.பாசிப்பருப்பு ஏற்கனவே வெந்திருப்பதால் அதற்குத் தண்ணீர் ஊற்றவேண்டாம்.
6. தண்ணீர் கொதித்ததும் தேவையான உப்பு, வேக வைத்த பாசிப்பருப்பு இவற்றைப் போட்டு மூடி வைக்கவும்.
7.மீண்டும் ஒரு கொதி வந்ததும் சேமியாவைக் கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்து,கட்டித் தட்டாமல் கிளறிவிட்டு அது வேகும் வரை மூடி வைக்கவும்.
8.சேமியா வெந்ததும் ரவையைச் சிறிதுசிறிதாகக் கொட்டி,கட்டித் தட்டாமல் கிளறிக்கொண்டே இருக்கவும்.
9. ரவை முழுவதையும் சேர்த்த பிறகு,நன்றாகக் கிளறிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி,மூடி வைக்கவும்.இந்த சூட்டிலேயே ரவை வெந்துவிடும்.
10.ருசியான ரவா சேமியா பொங்கல் தயார். சாம்பார் அருமையான இணை.