தேவையானவை:
மைதா மாவு- 1 கிண்ணம்
கோதுமை மாவு- 1 கிண்ணம்
பால்- கால் கிண்ணம்
உப்பு- சிறிதளவு
வெண்ணெய் அல்லது உருக்கிய நெய்- 1 தேக்கரண்டி
பூரணம் செய்ய:
கடலைப்பருப்பு- 3/4 கிண்ணம்
துருவின வெங்காயம்
பச்சைமிளகாய்- 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- 2 தேக்கரண்டி
துருவின இஞ்சி- 1 தேக்கரண்டி
உப்பு- சிறிதளவு
எண்ணெய்- 2 தேக்கரண்டி
செய்முறை:
1. மைதா மாவு, கோதுமைமாவு இரண்டையும் ஒரு பாத்திரத்தில் ஒன்று கலந்து உப்பு, வெண்ணெய் அல்லது நெய் போட்டுப் பிசையவும்.
2. 15 நிமிடங்கள் மாவை ஊற விடவும்.
3. பூரணம் செய்ய, ஒரு மணி நேரம் கடலைப்பருப்பை ஊற வைக்கவும். அதிக நீரில் பருப்பை வேக விட்டுக் குழைவாக வெந்து எடுக்கவும்.
4. வாணலியில் எண்ணெயிட்டு தால் விட்டுக் கெட்டியாகும் வரை குறைந்த தீயில் வதக்கவும். துருவின வெங்காயம், துருவின இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், கொத்தமல்லியைச் சன்னா தாலுடன் கலக்கவும்.ஆற விடவும்.
5. மாவை உருண்டைகளாக்கி பூரணத்தை உள்ளே வைத்து மடிக்கவும். இடவும். போளிக்குச் செய்வது போல் தான்.
6. அடுப்பை ஏற்றிச் சப்பாத்திக்கல்லில் இரு பக்கமும் திருப்பிச் சிவக்க எடுக்கவும்.
7. எண்ணெய் தடவிப் பரிமாறவும்.