தேவையானவை;
கோதுமை மாவு- 1 1/2 கிண்ணம்
துருவின முட்டைக்கோஸ்- 1 கிண்ணம்
பச்சைமிளகாய்- 1
சீரகம்- 1 தேக்கரண்டி
காரப்பொடி- 1/2 தேக்கரண்டி
எண்ணெய்- 2 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி- சிறிதளவு
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. கோதுமை மாவைச் சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து வைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் விட்டு மிதமான தீயில் துருவின கோஸூடன் சீரகம், பொடியாக நறுக்கின பச்சைமிளகாய், காரப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைச் சேர்த்து ஈரம் ஓரளவிற்குப் போக வதக்க வேண்டும்.
3. பிறகு பூரணத்தைச்(ஈரம் போகப் பிழிந்து) சப்பாத்தி மாவு உருண்டைக்குள் வைத்துப் பரோத்தாக்களாக இடவும்.
4. சப்பாத்திக்கல்லில் போட்டு இரு பக்கமும் திருப்பி வெந்தவுடன் எண்ணெய் தடவிப் பரிமாறவும்.
5. தால், குருமா, கொத்ஸூ வகைகள் இணை உணவுகள்.
கூடுதல் குறிப்புகள்:
1. கோஸில் பொரியல், கூட்டு என்று செய்திருப்போம், இது வித்தியாசமான ருசியான சிற்றுண்டி.
2. மேற்கூறிய முறையிலேயே பூரணமாகச் செய்யாமல் கோதுமை மாவுடன் மேலே குறிப்பிட்டவற்றை ஒன்றாகக் கலந்தும் சப்பாத்தி போலச் செய்யலாம்.
3. வித்தியாச விரும்பிகளுக்கும் ஒரே மாதிரி சிற்றுண்டி செய்து அலுத்தவர்களுக்கும் இது மாறுபட்ட வகை.